நான் உணர்ந்தேயிருக்கிறேன் நான் நிறைய சுவாசித்து விட்டேன் நான் நிறைய காதலை கடந்து விட்டேன் நான் குளிரேறிய இரவை வெக்கை பகலை கடந்தோடிவிட்டேன் நிறைய நிலவிருந்தும் இல்லாத இரவுகளையும் அப்படியே நான் அடிபழுத்த பயிர் தான் மூர்கமேறிய காற்று இனி எப்படி கடந்தாலென்ன
சகிக்கு சகம் தந்து நிற்கும் சிவனின் கைகளில் தகிக்கிறது பாலை தேவியின் கைகளில் வழியும் நீரூற்று தாண்டவ பொழுதின் முடிவில் தலை தடவிய சிவனின் கைகளில் பிசுபிசுக்கிறது கங்கை